×

வயலோகம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

இலுப்பூர், மே 21: அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நேற்று  முன் தினம் நடைபெற்றது. சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அன்னவாசல் அருகே உள்ள வயலோகத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலின் பூச்சொரிதல் விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு காலை முதல் மலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வயலோகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அகரப்பட்டி, புதூர், குடுமியாண்மலை, முதலிப்பட்டி, எழுவிறிச்சிப்பட்டி, நிலையப்பட்டி, அண்ணாப்பண்ணை உள்ளிட்ட பலவேறு பகுதியில் இருந்து பல்லாக்கில் பூக்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சமர்பித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், மண்டகப்படிகாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Vayalokham Muthuramaniamman Temple ,festivals ,
× RELATED பழநி கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 16ல் துவங்குகிறது